திங்கள், 21 பிப்ரவரி, 2011

காதலின் வீ(வி)தியா இல்லை காலத்தின் சதியா?!!

சந்தோசமாக இருந்தேன் நானும் ஒரு காலத்தில்,

குழந்தையைப்போல குதூகலமாக ...

உன்னை காதலிக்க தொடங்கினேன்!!!!

தொலைத்தேன் என் சந்தோசங்களை...!!

தொலைத்தேன் என் நிம்மதியை..!!

தொலைத்தேன் என் உறவுகளை..!!

ஆனால்...!!!???

!!!???

!!??

!?

துக்கம் மட்டும் தொண்டை வரை...!!

துக்கம் தொலைக்க !!

பீரும் பிராண்டியும் குடித்தேன்..

கிறக்கம் வந்ததே தவிர !!!??

உறக்கம் வரவில்லை...!!!

பறக்க நினைத்தேன் காதல் வானிலே...!!!

வீழ்ந்து கிடக்கிறேன் காலத்தில் வீ (வி)தியிலே!!!

இது காதலில் வீ(வி)தியா!!?இல்லை

காலத்தின் சதியா?!!!

எனக்கான கவிதை அல்ல...(காதலுக்கும் ,காலத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சிறகொடிந்த பறவைகளுக்காக)

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

முத்தங்கள் பல தந்தாய்...

நீ கோபமாய் திட்டிவிட்டாய் என்னை

நான் வருந்தவில்லை நீ திட்டியதை நினைத்து....

ஆனால் ...?!!!!

வருந்துகிறாய் நீ.....!!!

உன்னை திட்டிவிட்டேனடா என்று என்னிடம் சொல்லி....

முத்தங்கள் பல தந்தாய்....

sorry -கள் பல சொன்னாய்....

sorry- யை வேண்டாம் என்று மறுத்தேன்....


முத்தங்களை மறுக்கவில்லை....

இத்தனை முத்தம் தருவாய் என்று தெரிந்திருந்தால்

தினமும் உன்னிடம் திட்டு வாங்கிக்கொண்டே

இருந்திருப்பேன் ?!!!!!


ஞாயிறு, 26 டிசம்பர், 2010

நண்பேண்டா....




ஒரு தாய் வயிற்றில் நாங்கள் பிறக்கவில்லை

ஆனால் பிறப்பால் நாங்கள் பிரிக்கப்படவில்லை.....

ஒரே மதத்திலும் பிறக்கவில்லை

ஆனால் மதத்தால் நாங்கள் பிரிக்கப்படவில்லை...

எங்கேயோ பிறந்தோம்,

எங்கேயோ வளர்ந்தோம்

அயல்நாட்டில் ஒன்றானோம்.....

உடன்பிறந்தவன் எனக்கு நண்பனாக இருக்கவில்லை

ஆனால்

நண்பன் உடன்பிறந்தவனாக இருக்கின்றான்...

அன்புள்ள நண்பர்(அண்ணன்)தாஸுக்கு....

செவ்வாய், 30 நவம்பர், 2010

கோபம்

நீ என்னை கோபமாக திட்டுவது கூட

சுகமாகத்தான் இருக்கிறது...

என் தெரியுமா?!!!!!
!!!...
!!!!...
!!!!!!!....
நீ அப்போது திட்டியதை நினைத்து

நான் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறேன்....

என் மனசும் என் கண்களும்..

என் மனசுக்கு மகாவிடம்

பேசவேண்டுமென்று ஆசை...

என் கண்களுக்கு முருகேசனை

தூங்கவைக்க வேண்டுமென்று ஆசை...

ஒன்றை விட்டு கொடுத்தால் தானே ..

மற்றொன்றை அடைய முடியும்...

அதனால் தான் ...

என் உறக்கத்தை விட்டு கொடுத்து விட்டேன்....

சுகமான காதல் வலி


உன்னோடு பேசாத இரவும்


எனக்கு இரவாக இல்லை..


உன்னோடு பேசிய இரவால்


எனக்கு பகலும் பகலாக இல்லை...

...

....

உறக்கமில்லாமல்.....


உனக்காக விழித்திருக்கும்


என் விழிகளுக்கு இரவில் வலி தெரியவில்லை...


உன்னோடு பேசுவதால்....


ஆனால் ......

பகலில் தான் தெரிகிறது வலி....


ஆனாலும்.....


சுகமான வலியாக....!!!!!




புதன், 25 ஆகஸ்ட், 2010

விபத்து


நீ சாலையை கடக்கும் போது


உன் அழகைக்கண்டு


பேருந்து உன்னை என்னிடம்


இருந்து பறித்து தனக்கு


சொந்தமாக்கிக்கொண்டதோ?!!!!


செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

படைத்தான் பிரம்மன் உன்னை...

பிரம்மன் படைப்பில்

உன் இரு இதழ்களை மட்டும்

ஏன் வில்லாக படைத்தான்

வாலிபர்களின் இதயத்தில்

அம்பு எய்வதற்கா?


வில் வித்தையில் சிறந்தவன்

அர்ச்சுனன் ...அந்த

அர்ச்சுனன் உன்னை பார்த்தால்

உன் இதழ்களை வில்லாக எடுத்து

உன் கண்களை மீணாக நினைத்து

அம்பு எய்திருப்பான்....

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலன் இங்கே ...காதலி அங்கே...

காதலன் இங்கே ...காதலி அங்கே...

என் வீட்டார் வெளிநாட்டு போகச்சொன்னபோது

நானோ மறுத்தேன்..மாட்டேன் என்றேன்...

ஆனால்....

நீயோ போகச்சொன்னாய்..

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்

உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்லி

அந்த நம்பிக்கையில் நானும் சென்றேன் ..

எனக்காக காத்திருப்பேன் ...

என்று சொன்னதை நம்பி....

வருடங்கள் மூன்று முடிந்தன..

எனக்காக காத்திருக்கும் உன்னைப்பார்க்க

ஆவலோடு கிளம்பி டிக்கெட் பதிவு செய்தேன் ..

பதிவு செய்த தேதியை உனக்கு தெரிவிக்க

நான் உன்னை தொடர்பு கொண்டேன் தொலைபேசியில்

பதிலுக்கு நீயும் சொன்னாய் ..!!!

நீங்கள் பதிவு செய்த அதே தேதியில்

எனக்கும் பதிவு திருமணமென்று ...


?!!


?!!!

?!!!!

?!!!!!


?!!!!!!


எனக்கு என்று சொன்ன நீ

நம் பெற்றோரிடம் நம் காதலை பற்றி சொல்லி

நம் இருவருக்கும் பதிவு திருமணதிற்கு

சம்மதம் வாங்கிய விஷயத்தை மட்டும்

என்னிடம் மறைத்து விட்டாயேடி கள்ளி ...




புதன், 4 ஆகஸ்ட், 2010

உனக்குள் நான்(ஆக)வர காத்திருக்கிறேன்

ஒரு நாள் அதிகாலை வேளையில்

வேப்பமரத்து நிழலில்

தோழிகளின் சூழலின் நடுவில் நான் .....

நீ மட்டும் இல்லாமல் இருந்தாய்

எனக்கோ தோழிகளின் பேச்சில்

கவனம் இல்லை ....

என் கவனம் எல்லாம் உன்னை

தேடுவதில் மட்டுமே இருந்த்தது ...

என் முகம் மட்டும் புன்னகையை

தோழிகளுக்கு தந்திருந்தது ....

என் இரு விழிகளும் உன்னை

வலை வீசி தேடித்திரிந்தன.....

கண் இமைக்கும் நேரத்தில் நீ

என் முன் வந்து நின்றாய்.....

நேற்று வரை என் மனதில்

மட்டுமே பதிந்திருந்த நீ

இன்று தான் என் இரு விழியிலும் பதிந்தாய் .....

ஆனால் நானோ இன்று தான்

உன் இரு விழிகளில் பதிந்திருக்கிறேன் ...

உன் இரு விழிகளில் பதிந்த நான்

என்று உன்

(மனதில்)பதியப்போகிறேன்..

என் வாழ்நாள் முழுவதும் உனக்காக

(உன்)இதயத்தின் அழைப்பிற்காக

உனக்குள் நான்(ஆக)வர

காத்திருக்கிறேன் கண்ணே (மகாலெட்சுமி).......

திங்கள், 26 ஜூலை, 2010

வாழ்க்கைத்துணை ...

அன்று உன் ஆள்க்காட்டி விரலைக்காட்டி

நீ தான் என் வாழ்க்கை என்றாய் ...!!!!!

இன்று அதே ஆள்க்காட்டி விரலைக்காட்டி

அதோ அவர் தான் என் வாழ்க்கைத்துணை

என்கிறாய்!!!!!!!....

தூரத்தில் நின்றிருந்த ஒரு

ஆடவனைக்கட்டி .....!!!!!!

திங்கள், 19 ஜூலை, 2010

சுவாசிக்கிறேன் ....

"நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்

உன் நினைவுகளை உள்ளிழுத்து

என் நினைவுகளை காற்றில் கலந்துவிடுகிறேன்

என் நினைவுகளை நீ

சுவாசிக்க வேண்டுமென்பதற்காக!!!!!

செவ்வாய், 13 ஜூலை, 2010

உன்னைச்சுற்றும் வாலிபனாக!



சந்தோசமாக இருந்தேன் நானும்

ஊரைச்சுற்றும் வாலிபனாக !!!

ஏனோ வந்தாய்!!

காதலிக்கிறேன் என்றாய்!!

அன்று முதல்

ஊரைச்சுற்றுவதை நிறுத்திவிட்டு

உன்னை சுற்றத் தொடங்கிவிட்டேன்......

செவ்வாய், 6 ஜூலை, 2010

உன் அரவணைப்பில் என்றும் நான்....




என்னை என் தாய் அனாதையாக்கினால்


என் ஏழு வயதில் ....!!!!!


அன்று என்னை அரவணைக்க ஆள்

இல்லாமல் தவியாய் தவித்தேன் .......

என் சந்தோசங்களையும்,


என் துக்கங்களையும் சொல்லிக்கொண்டு


சாய்வதற்கு ஒரு தோள் இல்லாமல்


தவியாய் தவித்தேன் .......


ஆனால் ?!!!


இன்றோ நீ இருக்கிறாய் !!


எனக்காக உன் தோள் கொடுக்கும்


தோழியாக !!!!


என்னை அரவணைக்கும்


தாயாக !!!!!இனி


உன் அரவணைப்பில் என்றும் நான்........

தவம் புரிகின்றாயோ தாயே?!!!

தாயே ஏன் என்னை அனாதையாக்கினாய்?!!!

உன் பிரிவால் வாடும் உன் மகனுக்கு என்ன

பதில் கூறப்போகிறாய்?!!!!

உன் முகம் என் மனதில் முத்திரை

ஆவதற்கு முன் நீ ஏன் சித்திரமனாய்?!!!!

பதினெட்டு வருஷம் தவமிருந்து

நீ பெற்றெடுத்த தவ புதல்வர்களை

விட்டுவிட்டு மீண்டும் தவம் புரிகின்றாயோ?!!!!

உன் தவப் புதல்வர்கள் நீடோடி


வாழ்வதற்க்கா??!!!!

என்றும் உங்கள் நினைவில் !!!!!!


முருகேசன்&கணேசன் .....

கனவிலும் உன்னுடன்


நள்ளிரவில் கனவுகளில்

உன்னோடு பேசிக்கொண்டும்

சிரித்துக்கொண்டும்

இருக்கின்றேனாம்

காலையில் நண்பர்கள்

சொல்லுகிறார்கள்...........



உன்னோடு தொலைபேசியில்

எப்போதும் பேசிக்கொண்டிருப்பதால்

சில நேரம் நள்ளிரவில்(கனவில்)

பேசிக்கொண்டிருந்தாலும்

என் நண்பர்கள் கண்டு கொள்வதில்லை

விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று

நினைத்து...........


உறக்கத்தில் கூட

முத்தமிடுகிறேன்

என் தலையணைகளை

நீயாக நினைத்து........

செவ்வாய், 25 மே, 2010

இரு வரி கவிதை




உன் இதழ்களைப்

பார்த்து தான் நான்

தெரிந்துகொண்டேன் !!!!

ரோஜா இதழ்களை

விட உன் இதழ்கள்

மென்மையானதென்று..........!!!!!!!

எனக்காக

இந்த இதழ்கள்

சொல்லும் இரு வரிக்கவிதை

முத்தமிடு என்னை(kiss me)........

திங்கள், 24 மே, 2010

காதல் ரோஜா








எனக்காக நீ


வாங்கித்தந்த


ரோஜா மலர்கள்


வாடாமல் இருக்கிறது


இதமாக என்


இதயத்தில்.........

புதன், 21 ஏப்ரல், 2010

காதலின் மென்மை!!!!!!!









காதல் மென்மையானது
பூக்களைப்போல,
அந்த பூக்கள் வாடாமல்
பெற்றோர்கள்
வாழவைக்க
வேண்டும்
காதலர்களை!
பூக்களாக நினைத்து.......!!!!!!!!!



திங்கள், 19 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வாழ்க்கை தான் எத்தனை

விசித்திரமானது அழவைக்கிற

கோபத்தையும் ,மகிழவைக்கிற

சிரிப்பையும் உன் ஒருவனிடமே

தந்திருக்கிறது...............